ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்துபோன அன்னையர் தினத்தில் பல பிரபலங்களும் தங்களது அன்னை பற்றிய நெகிழ்வான பதிவுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டனர்.. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் தனது அன்னை பற்றி பகிர்ந்துகொண்டதுடன் தனது அன்னையின் மேன்மையை பறைசாற்றும் விதமாக தனது தந்தையை பற்றிய விஷயம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.. இதன்மூலம் மோகன்லாலுக்குள் இப்படி ஒரு சோகம் இத்தனை நாட்கள் ஒளிந்துகொண்டுள்ளதா என்பது தெரியவந்துள்ளது.
மோகன்லாலின் தந்தை விஸ்வநாதன் நாயர்.. தாய் சாந்தகுமாரி. மோகன்லாலின் தந்தை 2007ல் காலமாவதற்கு முன் சில வருடங்களாக அவருக்கு ஞாபக மறதி நோய் தாக்க தொடங்கியிருந்ததாம். பொதுவாக இதுபோன்ற நோயுள்ளவர்களை வெளியில் எங்கும் அழைத்து செல்லாமல் வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் மோகன்லாலின் அம்மாவோ, தனது கணவரை எந்த விசேஷங்களுக்கு சென்றாலும் உடன் அழைத்து செல்வாராம்.. அங்கு வந்திருப்பவர்களை மீண்டும் அறிமுகப்படுத்தி, அவர்களுடனான பழைய நினைவுகளையும் ஞாபகப்படுத்த முயல்வராம். இவ்வாறு பல வருடங்கள் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் செய்துள்ளார் மோகன்லாலின் அம்மா.
இதுகுறித்து கூறியுள்ள மோகன்லால், “எந்த டாக்டரும் உங்கள் கணவரை இப்படி பார்த்துக்கொள்ளுங்கள் என என் அம்மாவிடம் கூறவில்லை.. ஆனால் என் அப்பாவை சிறு குழந்தையைப்போல பார்த்துக்கொள்ளும் மன வலிமையை என் அம்மாவுக்கு தந்தது அவர்களுக்குள் இருந்த அன்பும் காதலும் தான். எந்த தாய்க்கும் எதையும் கற்றுத்தர தேவையில்லை.. அதுதான் தாய்மைக்கே உண்டான பெருமை” என நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.