அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
இதற்கு முன்புவரை இருந்து வந்த திருநங்கைகள் குறித்த பார்வை மாறி சமீபகாலமாக சினிமாவிலும் பொதுவெளியிலும் ஓரளவுக்கு அவர்களை மரியாதையாக பார்க்கும் எண்ணம் மேலோங்கி உள்ளது. தர்மதுரை படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் மூலம் அதை நமக்கு உணர்த்தியிருந்தார் இயக்குனர் சீனு ராமசாமி.. ராம் இயக்கியுள்ள 'பேரன்பு' படத்தில் அஞ்சலி அமீர் என்கிற திருநங்கை மம்முட்டியுடன் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது, தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் கொச்சி மெட்ரோ ரயில் பணிகளில் 23 திருங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது..
பொதுமக்களுடன் சேர்ந்து திரையுலக பிரபலங்களும் இதனை வரவேற்றுள்ளனர்... குறிப்பாக மோகன்லா, மஞ்சு வாரியர், பிருத்விராஜ் ஆகியோர் இதுகுறித்த தங்களது மகிழ்ச்சியை உடனே வெளிப்படுத்தியுள்ளனர். மஞ்சு வாரியர் கூறும்போது, “இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.. இப்போதுதான் திருநங்கைகள் குறித்த பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நானும் எனது படங்களில் நிறைய திருநங்கைகளுடன் பணிபுரிந்திருக்கிறேன். சொல்லப்போனால் 'திருநங்கை' என அவர்களை தனியாக பிரிக்க வேண்டாம். அவர்களும் நம்மைப்போன்றவர்கள் தான்” என இதுகுறித்து வரவேற்பு தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர்.
இதுகுறித்து, “கொச்சி மெட்ரோ ரயிலின் பாராட்டத்தக்க நல்ல துவக்கம்” என மோகன்லால் பாராட்டியுள்ளார். பிருத்விராஜ் இந்த செய்தியை தனது முகநூலில் ஷேர் செய்ய, அதை சுமார் ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.