14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மலையாளத்தில் 22 வருடங்களுக்கு முன் பாசில் இயக்கி, மோகன்லால் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் மணிச்சித்திரதாழு. இந்தப்படம் தமிழில் சந்திரமுகியாக வந்து சூப்பர் ஹிட்டாக ஓடியதோடு, மற்ற மொழிகளிலும் ரீ-மேக் ஆனது. 'மணிச்சித்திரத்தாழு' படத்தில் மற்ற எந்த கதாபாத்திரங்களையும் விட நாகவல்லி கேரக்டரில் நடித்திருந்த ஷோபனா தான் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். அதனாலேயே ஷோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருதும வாங்கித்தந்தது.
சமீபத்தில் தனது முகநூலில் நாட்டிய உடையுடன் கூடிய தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் ஷோபனா.. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்வில் கலந்துகொண்ட ஷோபனா, அந்த உடையுடன் ஒரு அலங்கரிக்கப்பட்ட கதவின் அருகில் அமர்ந்து, குறிப்பாக கதவின் தாழ்ப்பாள் (மணிச்சித்திரதாழு) தெரியும் விதமாக அமர்ந்து இந்த போட்டோவை எடுத்துள்ளார். போட்டோவுடன் கூடவே 'மணிச்சித்திரதாழு'.. என கேள்விக்குறியிட்டுள்ளதுதான் பல யூகங்களை கிளப்பியுள்ளது. ஒருவேளை மீண்டும் நாகவல்லியாக மாற தயாராகிறேன் என சூசகமாக உணர்த்துகிறாரா ஷோபனா..?