காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
தமிழில் பெங்களூர் நாட்கள் படத்தில் நடித்த ராணா, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக தனது உடல்கட்டை கம்பீர தோற்றத்துக்கு மாற்றி நடித்திருந்தார் ராணா. தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்து வந்தபோதும், பாகுபலி மூலம் அதிரடி வில்லனாகவும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், கைதி நம்பர் 150 படத்தை அடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் ஒரு அதிரடியான வில்லன் வேடம் உள்ளதாம். அதில் ராணா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிரஞ்சீவி படம் என்றதும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம் ராணா. வருகிற ஆகஸ்ட் 22-ந்தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.