ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மாநகரம் படத்தில் நம் மனம் கவர்ந்த ஜோடியான 'சந்தீப்-ரெஜினா இருவரும் தற்போது தெலுங்கில் 'நட்சத்திரம்' என்கிற படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கியுள்ளார். ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணாவின் கணவரே தான். இவர் ரெஜினா குறித்து சமீபத்தில் கூறுகையில், “இந்தப்படத்தில் ரெஜினாவுடன் இணைந்து பணியாற்றிய பொழுது, என் மனைவியின் (ரம்யா கிருஷ்ணனின்) யங்கர் வெர்ஷன் தான் ரெஜினா என்பதை கண்டுகொண்டேன்' என புகழ்ந்துள்ளார்.
இந்தப்படத்தில் ரெஜினா ஒப்பந்தமானதுமே, ரெஜினாவின் நட்பு வட்டாரத்தில் இருந்த சிலர், கிருஷ்ண வம்சி தனது பட நாயகிகளை அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வைத்து விடுவாரமே உஷாராக இருந்துக்கோ என பயமுறுத்தினார்களாம்.. ஆனால் இப்போது, “என்ன அப்படிப்பட்ட காட்சியில் நடித்தியா என கேட்டால், அப்படியா ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி ஏதும் தெரியவில்லை.. ஒருவேளை படம் வந்தபின் தான் அப்படிப்பட்ட காட்சிகள் வந்திருக்கிறதா என பார்க்க வேண்டும்” கழுவுற மீனில் நழுவுற மீனாக பதிலளித்துள்ளாராம் ரெஜினா.