ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடுகு படத்தில் நடித்த சுபிக்ஷா தற்போது வேட்டை நாய், நேத்ரா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நேத்ரா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சுபிக்ஷா. அவருக்கு ஆக்சன் காட்சியும் இப்படத்தில் உள்ளதாம். முக்கியமாக, சாப்ட்டான ரோலில் நடித்துள்ள அவர், ஒருகட்டத்தில் ஆவேசமாக பொங்கி எழுவாராம். அப்போது அதிரடியான காட்சிகளில் நடித்துள்ளாராம் சுபிக்ஷா.
அந்தவகையில், ஒரு காட்சியில் ஒரு வீட்டின் சுவரில் ஏறி ஜன்னல் வழியாக உள்ளே செல்லும் காட்சியில் நடித்தபோது ரோப்பில் தொங்கியபடி நடித்துள்ளார் சுபிக்ஷா. அந்த காட்சியில் டூப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று டைரக்டர் சொன்னபோது, ஆக்சன் காட்சிகளுக்கே டூப் இல்லாமல் நடிக்கும்போது இந்த மாதிரி காட்சிகளுக்கு எதற்காக டூப் நானே நடிக்கிறேன் என்று தில்லாக ரோப்பில் தொங்கியபடி ரிஸ்க் எடுத்து நடித்தாராம் சுபிக்ஷா.