ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாள நடிகர்களில் பலரும் ஷூட்டிங் இல்லாத நாட்களில் சொந்த வேலைகளை பார்க்கும்போது, இளம் முன்னணி நாயகன் துல்கர் சல்மான் மட்டும் சமூக நிகழ்வுகளுக்கு அதில் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கி விடுகிறார்.. அப்படித்தான் சமீபத்தில் கொச்சியில் உள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கு (SOS Children Village Kerala) சென்று அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட்டு அவர்களை மகிழ்வித்துள்ளார்..
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.. இங்குள்ள குழந்தைகளுக்கு துல்கர் சல்மானை ரொம்பவே பிடிக்கும் என்பதால், நிர்வாகத்தினர் அதை துல்கர் சல்மானிடம் கோரிக்கையாக வைத்தனர்.. அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட துல்கர் சல்மான் அங்கே வந்து குழந்தைகளை மகிழ்வித்து சென்றுள்ளார்.