ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கசபா' என்கிற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் வரலட்சுமி சரத்குமார். அதை தொடர்ந்து சமுத்திரக்கனி மலையாளத்தில் இயக்கும் 'அப்பா' ரீமேக்கான 'ஆகாச மிட்டாயி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினார்.. ஆனால் விலகியதும் ஒருவகையில் நல்லதற்குத்தான் என்பது போல மீண்டும் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமியை தேடி வந்தது..
மம்முட்டியை வைத்து 'ராஜாதி ராஜா' படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் என்பவர் இயக்கம் இந்தப்படத்தில் மம்முட்டி ஸ்ட்ரிக்ட்டான காலேஜ் புரபெஷராக நடிக்க, ஐ.பி.எஸ் அதிகாரி பவானி துர்கா வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.. கல்லூரியில் மாணவர்களின் இரு பிரிவுகளுக்குள் ஏற்படும் மோதலை தொடர்ந்து வரலட்சுமி கல்லூரிக்குள் நுழையவேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அதை தொடர்ந்து அவர் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுமாக அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம். 'புலி முருகன்' என்கிற சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.