ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி நடிப்பில் செளகார்பேட்டை என்ற பேய் படத்தை இயக்கியவர் விசி.வடிவுடையான். அந்த படத்தில் முதன்முறையாக இரண்டு விதமான வேடங்களில் நடித்திருந்தார் ஸ்ரீகாந்த். இறந்த பிறகும் ஆவியாக வந்து ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி இருவரும் பாட்டு பாடினர்.
அதேப்போன்று தற்போது அதே வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடித்து வரும் பொட்டு படத்திலும் ஒரு பாடல் காட்சி உள்ளதாம். இந்த பாடலில் இறந்து போன ஆவிகளெல்லாம் ஒன்றுகூடி ஆவேசமாக பாடும் ஒரு பாடல் உள்ளதாம். இந்த பாடல் காட்சி வரும்போது தியேட்டர்களெல்லாம் அதிருமாம். அந்த அளவுக்கு அதிரடியான இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையமைத்திருப்பதாக சொல்கிறார் அம்ரேஷ்.
மேலும், லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் சில ஹிட் பாடல்களைக் கொடுத்த அம்ரேஷ், இந்த பொட்டு படத்தின் பாடல்கள் தன்னை இன்னும் பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார். இதையடுத்து த்ரிஷாவின் கர்ஜனை, பிரபுதேவாவின் யங் மங் சங் ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் அம்ரேஷ்.