சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல மலையாள எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தின் ஒரு பகுதியாக எழுதிய ரண்டமூழம் நாவல் 'மகாபாரதம்' என்கிற பெயரில் சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. முழுக்க பீமனின் கண்ணோட்டத்தில் இந்த கதை நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதாம். இதில் பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார்.. விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்த படம் பற்றி ஸ்ரீகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “இந்த கதையில் பீமன் பற்றிய கதாபாத்திரத்தை நான் மனதில் உள்வாங்கும்போது அது மோகன்லால் உருவமாகத்தான் என் மனதில் பதிந்தது. ஒருவேளை அப்படி வேறு ஒருத்தர் தான் பீமனாக நடிக்கவேண்டும் என்கிற சூழல் உருவாகி இருந்தாலோ, அல்லது மோகன்லால் நான் நடிக்க மாட்டேன் என கூறியிருந்தாலோ, இந்த ஸ்கிரிப்ட்டை அப்படியே எம்.டி.வாசுதேவன் நாயரிடம் திருபிக்கொடுத்திருப்பேன். காரணம் மோகன்லாலை தவிர வேறு யாரையும் பீமனாக நினைத்து பார்க்க என்னால் முடியவில்லை” என கூறியுள்ளார் ஸ்ரீகுமார் மேனன்.
மேலே படத்தில் பீம்ணனின் உருவத்தில் உள்ள மோகன்லாலின் தோற்றம் மோகன்லால் ரசிகர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்டதாகும்.