ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் படங்களைத் தள்ளி வைப்பது என்பது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. பைனாஸ் பிரச்சனை, அரசியல் பிரச்சனை, தியேட்டர்கள் பிரச்சனை என பல்வேறு காரணங்களால் படங்களின் வெளியீட்டைப் பற்றி முதலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டு சில மாதங்கள் கழித்து வேறு ஒரு தேதியை அறிவிப்பது வழக்கமாகி வருகிறது.
நேற்று இரவு '2.0' படத்தின் வெளியீட்டை தீபாவளியில் இருந்து 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தார்கள். அதற்கு முன்னதாக, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தை செப்டம்பர் 29ம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக அறிவித்தார்கள். முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 25ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வரிசையில் மகேஷ்பாபு நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் வெளியீடும் ஜுன் 23ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது என அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் மேலும் சில படங்கள் சேருமா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.