ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம், தலைப்பு அறிவிப்பதற்கு முன்பாகவே ஜுன் 23ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம்தான் படம் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நாளை முதல் அடுத்த 20 நாட்களுக்கு நடக்க இருக்கிறதாம். அதற்குப் பிறகுதான் கடைசி கட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். அதனால், திட்டமிட்டபடி படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும் என்கிறார்கள்.
மகேஷ்பாபு நடித்து இதற்கு முன் வெளிவந்த 'ஸ்ரீமந்துடு' படம் ஆகஸ்ட் மாதத்தில்தான் வெளிவந்தது. படமும் சூப்பர் ஹிட் ஆகி வசூலை வாரிக் குவித்தது. எனவே அதே சென்டிமென்டில் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடலாமா என தயாரிப்பாளர்கள் நினைத்து வருகிறார்களாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் படத்தை வெளியிட இருப்பதால் படத்தின் தரத்தில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவாம். விரைவில் படம் தள்ளிப் போவதற்கான அறிவிப்பு வந்தாலும் வரலாம்.