ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் லாவண்யா திரிபாதி, 3 வருடங்களுக்கு முன்பு சசிகுமாருடன் பிரம்மன் படத்தில் நடித்தார். தற்போது மாயவன் படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். இதில் அவர் சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:
பிரம்மன் படத்தின் கதை பிடித்துதான் நடித்தேன். படமும் நன்றாக வந்திருந்தது. ஆனால் ஏனோ அந்தப் படம் பெரிதாக போகவில்லை. அதனால் எனக்கும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு பக்கம் சென்று விட்டேன். அங்கு முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழ் மீது கவனம் செலுத்தவில்லை.
தற்போது மாயவன் படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறேன். ஹீரோவுக்கு நிகரான பவர்வுல் கேரக்டர். ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கிற போலீஸ் அதிகாரி ஹீரோ என்றால், நான் அந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கிற உளவியல் நிபுணர். இந்தப் படம் எனக்கு தமிழில் நல்ல இடத்தை பிடித்து தரும் என்று நம்புகிறேன்.
இயக்குனர் சி.வி.குமார் மிகவும் அமைதியானவர். படப்பிடிப்பில் அதிர்ந்து கூட பேசமாட்டார். ஆனால் என்ன வேண்டுமோ அது எத்தனை டேக் போனாலும் வாங்கிவிடுவார். இன்னும் பல படங்கள் இயக்குவார். அவரின் முதல் ஹீரோயின் என்பதில் எனக்கு பெருமை. என்கிறார் லாவண்யா திரிபாதி.