ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சஞ்சய் தத் 2013 ம் ஆண்டு, ஜான் கி பாசி என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் சில சமயங்களில் அவர் சூட்டிங்கிற்கு வர மறுத்து வந்தார். இதனால் சஞ்சய் தத் மீது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷகீல் நூரனி வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, சஞ்சய் தத் மீதான வழக்கை வாபஸ் பெறச் சொல்லி தாதாக்கள் சிலர் என்னை மிரட்டுகிறார்கள் என போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி சஞ்சய்தத்திற்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சஞ்சய் தத் நேற்று (ஏப்ரல் 15) ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து மும்பை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பிடிவாரணட் பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக சஞ்சய் தத் சார்பில் அவரது உதவியாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வழக்கு பல காலமாக நடந்து வருகிறது. எங்களுக்கு எங்கள் வழக்கறிஞருக்கும் தொடர் கொள்வதில் இருந்த இடைவெளியே இப்போது இந்த பிரச்னை இந்த அளவிற்கு பெரிதானதற்கு காரணம். நாங்கள் கோர்ட்டின் உத்தரவை மதித்து, நேரிலோ அல்லது எங்கள் வழக்குறிஞர் மூலமாக நேரில் ஆஜராகி விளக்கத்தை அளிப்போம். நிலைமை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகளை எடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் சஞ்சய் தத் தற்போது, தனது அடுத்த படமான பூமி படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.