ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாரிசு நடிகர்களுக்கு முதல் படம் அமைவதும், அப்படி அமைந்த சரியான நேரத்தில் வெளியாவதும் வெற்றிபெறுவதும் முக்கியமானவை. நடிகர் ஜெயராமும் தனது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாக வேண்டும் என 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'ஒரு பக்க கதை' படத்தில் நடிக்க வைத்தார்.. ஆனால் அந்தப்படம் வெளியாகவே இல்லை.. அதன்பின் வெளியான 'மீன் குழம்பும் மண்பானையும்' படம் காளிதாஸின் முதல் படமாக மாறியதுடன் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இந்தநிலையில் மலையாலத்திலாவது நல்ல இடத்தை பிடிக்கலாம் என 'பூமரம்' என்கிற படத்தில் அறிமுகமானார் காளிதாஸ். இந்தப்படத்தை இயக்கிவரும் அப்ரிட் ஷைன், நிவின்பாலியை வைத்து தொடர்ந்து இரண்டு நூறுநாள் படங்களை கொடுத்தவர்.. ஆனால் கடந்த வருட இறுதியிலேயே வெளியாகும் என சொல்லப்பட்ட 'பூமரம்' இன்னும் பூப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இரண்டு மொழிகளிலும் வெற்றிபெற்ற இயக்குனர்களின் படங்களில் தான் காளிதாஸ் நடித்துள்ளார் என்பதால் வியாபார சிக்கல் எதுவும் இல்லைஎன்றும், போஸ்ட் புரொடக்சன் தரப்பு பிரச்சனைகளினால் தான் இந்த இரண்டு படங்களும் முடங்கியுள்ளன என்றும் சொல்லப்படுகிறது.