ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மொழி, அபியும் நானும் படங்களை கொடுத்த ராதா மோகன் கடைசியாக உப்புக்கருவாடு படத்தை கொடுத்தார். ஆனால் அது பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது அவர் உருவாக்கி வரும் படம் பிருந்தாவனம். அருள்நிதி, நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தன்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வன்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார். எம்.எஸ்.விவேகானந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி இசைகோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
பிருந்தாவனம் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வெற்றி பெற்ற மொழி படத்தின் சாயலில் உருவாகி வருகிறது. மொழி படத்தில் ஜோதிகா வாய் பேச முடியாதவராக காது கேட்க முடியாதவராக நடித்திருந்தார். ஆனாலும் தைரியமான பெண்ணாக நடித்திருந்தார். அவரை காதலிப்பவராக பிருத்விராஜ் நடித்திருந்தார். இதில் அருள்நிதி காது கேட்க முடியாதவராக வாய் பேச முடியாதவராக நடித்திருக்கிறார். அவரை காதலிப்பவராக தன்யா நடித்திருக்கிறார்.
ஆனால் அருள்நிதி இதில் சாதுவான கேரக்டர். சலூன் கடை நடத்தும் சவரத் தொழிலாளி. அவர் ஒரு காமெடி நடிகரின் தீவிர ரசிகர். ஊட்டிக்கு படப்பிடிப்புக்கு வரும் அந்த நடிகர் அருள்நிதியை சந்திக்கிறார். அந்த சந்திப்பு அருள்நிதி வாழ்க்கையை எப்படி திருப்பி போடுகிறது என்பதுதான் கதை. படத்தின் கதை குளுகுளு ஊட்டியில் நடந்து முடிந்து, சமீபத்தில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய ‛யு' சான்றை அளித்துள்ளனர். கோடை கோண்டாட்டமாக படம் ரிலீஸாக இருக்கிறது.