காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
நன்றாக நடித்தார்கள் என்பதற்காக எல்லோருக்குமேவா விருதுகளை அள்ளிக்கொடுத்து விடமுடியும். தேர்வுக்குழுவின் இறுதி முடிவின்படி சிறந்தவர் யார் என்கிற விருதை அறிவிக்கிறார்கள். இதனுள்ளே அரசியல் இருக்கிறதா இல்லையா என்கிற சர்ச்சை ஒருபக்கம் இருக்கட்டும். அக்சய் குமாருக்கு எந்த அடிப்படையில் விருது வழங்கப்பட்டது என சிலர் விவாத கேள்வி எழுப்ப, 'கம்மட்டிப்பாடம்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்த விநாயகனுக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை என்கிற விவாதத்தை மலையாள திரையுலகில் பலர் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.
இதில் குறிப்பாக நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் ஒருபடி மேலே போய், “விநாயகனின் திறமையை எந்த விருதும் வரையறை செய்ய முடியாது.. அப்படி விருது கிடைத்திருந்தால் வினாயகனால் அந்த விருதுக்குத்தான் பெருமை” என சர்ச்சை கருத்தை தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.
விநாயகன் அந்த விருதுக்கு தகுதியானவர் தானா என்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்.. கீது மோகன்தாஸின் கணவர் ராஜீவ் ரவி தான் வினாயகன் நடித்த 'கம்மட்டிப்பாடம்' படத்தின் இயக்குனர் என்பதால் அந்த ஆதங்கத்தில் தான் இப்படி ஒரு கருத்தை அவர் கூறியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.