ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவுடன் எந்த விதத்திலாவது தொடர்பில் இருக்க வேண்டும் என நினைப்பவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். தான் நடித்த 'மைத்ரி' படத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் மோகன்லாலை இணைத்துக் கொண்டவர். அதுமட்டுமல்ல தற்போது மோகன்லாலின் சூப்பர் ஹிட்டான 'ஒப்பம்' படத்தின் கன்னட ரீமேக்கில் கண்பார்வையற்றவராக நடித்து வருகிறார் சிவராஜ்குமார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப்பின் அவர் நடிக்கும் மலையாள ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் விட இன்றைய இளம் நடிகர்களில் தன்னை கவர்ந்தவர் என்றால் அது துல்கர் சல்மான் தான் என்றும் தான் அவரது தீவிர ரசிகன் என்றும் குறிப்பிட்டுள்ளார் சிவராஜ்குமார். இன்றைக்கு வளர்ந்து வரும் புதிய நடிகர்களில் துல்கர் சல்மானை போன்ற திறமையான ஒருவரை நான் பார்த்ததில்லை, அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர்களில் அவரது நடிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது” என பாராட்டியுள்ளார்.