ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராமாயணத்தை எழுதிய வால்மீகி பற்றி தவறாக கருத்து சொன்ன பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டார்.
நடிகை ராக்கி சாவந்த் படத்தில் நடித்து பாப்புலரானதை விட நிஜ வாழ்க்கையில் எதையாவது செய்தோ, பேசியோ தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொள்கிறவர். கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராக்கி சாவந்த் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் பற்றி அவதூறான சில கருத்துக்களை பேசினார். இது இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இதில் ராக்கி சாவந்த் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும், ராக்கி சாவந்த் கண்டுகொள்ளாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
லூதியானா போலீஸ் தங்களிடம் சரணடைந்து விடுமாறு பலமுறை ராக்கி சாவந்துக்கு எச்சரிக்கை அனுப்பியது. அதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் அவரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், அதற்காக தனிப்படை அமைத்து மும்பை வந்தநிலையில் இன்று(ஏப். 4-ம் தேதி) கைது செய்தனர்.
இதற்கிடையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ராக்கி சாந்த் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு மீண்டும் வருகிற 9ந் தேதி விசாரணைக்கு வருகிறது.