ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரையுலகில் ஒரு படம் பற்றி விவரங்களை அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் விவரமாகச் சொல்ல மாட்டார்கள். பல விஷயங்களை மறைத்து பொய்யான தகவல்களைத்தான் தருவார்கள். பல படங்களின் வியாபார விவரங்களும், வசூல் விவரங்களும் அந்தப் படங்களுக்கு சம்பந்தமே இல்லாத மற்றவர்கள் தருவதை வைத்துத்தான் வெளியில் வருகின்றன.
அதில் சில தகவல்கள் பெருமையாக வரும், சில தகவல்கள் பொறாமையாக வரும். அப்படி ஒரு தகவல் நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் அணி சார்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தாணு பேசிய போது வெளிவந்தது. அதில் பெருமை இருக்கிறதா, பொறாமை இருக்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
கலைப்புலி எஸ். தாணு பேசும் போது கூறியதாவது, “விஷால் தயாரிப்பாளர்களையே தவிக்க விடுபவர். 'சமர்' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பின் போது, அவருக்கு தெலுங்கு வினியோக உரிமையைத் தரவில்லை என்ற காரணத்தால் அப்படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால், நான் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று சொல்லி, அப்படியே நடந்து காட்டியவர். அவர் நடித்து வெளிவந்த 12 படங்கள் தோல்விப் படங்கள். அந்தத் தயாரிப்பாளர்கள் தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த 'கத்தி சண்டை' படம் வரை தோல்வியைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் முதல் காப்பி விலை 4 கோடி. ஆனால், அந்தப் படத்தை 17 கோடி ரூபாய் லாபம் வைத்து 21 கோடிக்கு விற்றிருக்கிறார்கள்,” என்ற தகவலை வெளியிட்டார்.
இது பற்றி விஷால் தரப்பில் விசாரித்தால் தாணு அவர்கள் தயாரித்த 'கபாலி' படத்தின் செலவு எவ்வளவு, அதை அவர் என்ன விலைக்கு விற்றார் என்பதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்வாரா என எதிர் கேள்வி கேட்கிறார்கள்.