ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மம்முட்டி, சினேகா, ஆர்யா, மியா ஜார்ஜ் நடித்துள்ள மலையாளப் படம் கிரேட் பாதர். ஹனீப் அதானி இயக்கி உள்ளார், கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார், ஆகஸ்ட் சினிமா சார்பில் பிருத்விராஜ், சந்தோஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவர வேண்டிய படம், அப்போது தியேட்டர் அதிபர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் வெளிவரவில்லை. தற்போது கேரள பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் நாளை வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கல்ச்சர் அண்ட் ஆர்ட் என்ற பேஸ்புக் தளத்தில் படத்தின் கடைசி 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சி வெளியாகி உள்ளது. இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையில் ஓடும் காட்சியை செல்போனில் எடுத்து பதிவேற்றி உள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவாரான ஷாஜி நடேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.