ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் மரகதமணி என்றும் தெலுங்குத் திரையுலகில் கீரவாணி என்றும் அழைக்கப்படும் பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் இசையமைப்பதிலிருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டார். சுமார் 3 வருடங்களுக்கு முன்பு டிசம்பர் 8ம் தேதி 2016ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலிருந்து விலகிக் கொள்வேன் என அறிவித்தார்.
“என்னுடைய முதல் ரிக்கார்டிங்கை டிசம்பர் 9ம் தேதி 1989ம் ஆண்டு சென்னையில் நடந்தது. அப்போதே என்னுடைய ரிடையர்மென்ட் என்பதை டிசம்பர் 8, 2016ம் தேதி என முடிவு செய்துவிட்டேன்,” என அறிவித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு என சுமார் 200 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள மரகதமணியின் ஓய்வு அறிவிப்பு அப்போதிலிருந்தே தெலுங்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாகுபலி 2 படம்தான் அவர் இசையமைத்து வெளிவரும் கடைசி படமாக இருக்கும் என்றார்கள்.
இதனிடையே, நேற்று பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடப்பதற்கு முன்பு தன்னுடைய ஓய்வு முடிவை அவர் மாற்றிக் கொண்டார். நேற்று காலை முதலே டிவிட்டரில் தொடர்ந்து வெளிப்படையான கருத்துக்களாகப் பதிவிட்டு வந்தார். அதில் சில தெலுங்கு இயக்குனர்கள் தன்னுடைய ஆலோசனைகளைக் கேட்பதேயில்லை என்றெல்லாம் விமர்சித்திருந்தார் .
கடைசியாக, “என்னுடைய பயணம் தொடர்கிறது, என் விருப்பப்படி. அதற்காக என்னை வாழ்த்தியவர்களுக்கு நல்ல செய்தி. அவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி,” எனக் கூறியுள்ளார்.
மரகதமணி தமிழில் “அழகன், நீ பாதி நான் பாதி, சேவகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, ஸ்டூடன்ட் நம்பர் 1, நான் ஈ, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி” ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.