ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாடல் தொடங்கி, ஊதா கலரு ரிப்பன் உள்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருப்பவர் யுகபாரதி. சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான மாவீரன் கிட்டு படத்தில் வசனம் எழுதியிருந்தார். மேலும், சமீபகாலமாக டி.இமான் இசையில் அதிகப்படியான பாடல்களை எழுதி வருகிறார் யுகபாரதி. அப்படி அவர்கள் இணைந்து செயல்படும் படங்களின் பாடல்கள் ஹிட்டடித்து வருவதால், அவர்களை ராசியான கூட்டணி என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இதுபற்றி யுகபாரதி கூறும்போது, நான் எழுதும் ஒவ்வொரு பாடலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில்தான் பாடல்கள் எழுதி வருகிறேன். அதில் டி.இமான் இசையில் எழுதும் பாடல்கள் அதிகமாக ஹிட்டாகி வருவதால் எங்களை ராசியான கூட்டணி என்கிறார்கள். அப்படி சொல்வது மகிழ்ச்சியாகவே உள்ளது. தற்போது நான் டி.இமான் இசையில் மட்டும் 7 படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறேன். மொத்தம் 25 படங்களுக்கு பாடல் எழுதுகிறேன் என்கிறார்.
அவரிடத்தில், இளையராஜா கூறியுள்ள பாடல் காப்பி ரைட்ஸ் பற்றி கருத்து கேட்டபோது, இளையராஜா சொல்வது நியாயமானது. அதை நான் வரவேற்கிறேன் என்கிறார் யுகபாரதி.