ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் கேரள இளைஞர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.. சினிமாவில் கதைசொல்லும் விதத்தில் ஒரு புதிய பாணியை இந்தப்படம் உருவாக்கியுள்ளது என விமர்சகர்கள் பலரும் சிலாகித்து கூறி வருகிறார்கள்.. அதனால் இந்தப்படத்தை மேலும் புரமோட் செய்யும் விதமாக இந்தப்படத்தில் இடம் பெற்ற புதுமுக நடிகர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி இருந்தார் படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி..
ஒரு பத்திருபது பேர் கும்பலாக பைக்குகளில் கிளம்பி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு விரைய, வழியில் போலீஸ் அதிகாரி ஒருவர் இவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்.. அவர்களை சற்று மோசமான வார்த்தைகளால் விமர்சித்த அந்த அதிகாரி, அவர்களை மேற்கொண்டு போகவிடாமல் தடுத்து திரும்பிச்செல்லும்படி கூறியுள்ளார். அவர் இவ்வாறு நடந்துகொள்ள இந்த நடிகர்கள் கூட்டத்தில் படத்தில் நடித்த ஒரு இளம்பெண் (மட்டுமே) இருந்ததுதான் காரணமாம்.. அதனால் இந்த இளைஞர் கும்பலை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்த போலீஸ் அதிகாரி அவமரியாதையாக நடந்துகொண்டாராம்.
படக்குழுவினர் விளக்கம் சொல்லியும் கேட்காமல் சாலை விதிகளை கடைபிடிக்காமல் வந்ததாக கூறி அவர்களுக்கு பைன் விதித்துள்ளார் அந்த அதிகாரி. இதுபற்றி படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசரி கூறும்போது, “யார் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என நினைக்கிறோமே அவர்கள் தான் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குபவர்களாக இருக்கிறார்கள்.. தங்களை கலாச்சார காவலர்களாக கூறிக்கொண்டு, அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள்” என வேதனையுடன் கூறியுள்ளார்.