பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நீண்ட நாட்களெல்லாம் ஆகவில்லை மம்முட்டி போலீஸ் யூனிபார்ம் அணிந்து கடந்த வருடம் தானே அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த 'கசபா' படம் வெளியானது. கூடவே அவருக்கு 'கசப்பான' அனுபவங்களையும் தந்துவிட்டது. ஆம், அந்தப்படத்தில் அவர் வில்லன் இல்லை என்று சொல்லாலமே தவிர, கிட்டத்தட்ட கெட்ட குணங்களுடைய ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதேசமயம் அராஜகமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளியான பின்னர் கேரளாவில் மாதர்சங்க அமைப்புகள் மம்முட்டிக்கு எதிராக கொடி பிடித்து கோஷம் போடும் அளவுக்கு அந்த கேரக்டர் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தது.
மக்களிடம் தனது போலீஸ் கேரக்டர் குறித்த பாசிடிவான எண்ணத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என மம்முட்டி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகி ப்ரெஷ்ஷான போலீஸ் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷாம்தத்.. ஆம்.. 100 நாட்கள் ஓடிய சூப்பர்ஹிட் படமான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்து இப்போது இயக்குனராக மாறியிருக்கும் அதே ஷாம்தத் தான்.. இந்தப்படத்தில் மம்முட்டிக்கு இன்வெஸ்டிகேஷன் போலீஸ் அதிகாரி வேடமாம். அதிரடியான க்ரைம் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்..