ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவை பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர்கள் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது நின்று நிதானமாக அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என அனைத்து வேலைகளையும் பொறுப்பாக செய்வார்கள்.. ஆனால் ஒரு படம் ஓடிவிட்டாலோ பெரும்பாலான நடிகர்களிடம் வான்டட் ஆக பந்தா வந்து ஒட்டிக்கொள்கிறது.. ஆனால் நியாயமாக நடக்கும் ஒரு சில நடிகர்கள் கூட சூழல் காரணமாக தங்களது டென்ஷன் முகத்தை ரசிகர்களுக்கு காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்..
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் 'ஒரு மெக்ஸிகன் அபராதா'.. இதுநாள் வரை சினச்சின்ன கேரக்டர்களிலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும் நடித்துவந்த டொவினோ தாமஸ் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.. இந்தப்படம் வெளியான அன்றே ஹிட் என தெரிந்துவிட, அதை நேரில் பார்ப்பதற்காகவும் படத்தின் புரமோஷனுக்காகவும் சில தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார் டொவினோ தாமஸ்.. அந்த சமயத்தில் கூட்டத்தில் தன்னை நெருங்கி வந்த ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட கோபத்தில் அவர்களை நோக்கி கத்திவிட்டார்.. இத்தனைக்கும் ரொம்பவே சாதுவானவர் தான் இவர்..
ஆனால் இதை வீடியோவாக எடுத்த யாரோ ஒருவர் சோஷியல் மீடியாவில் பரப்பிவிட, அதை தொடர்ந்து டொவினோ தாமஸின் இந்த செயலுக்கு கண்டனங்களும் அவரை பற்றிய மீம்ஸ்களும் பறக்க ஆரம்பித்தன.. ரசிகர்களிடம் தனது பெயர் எதிர்மறையாக மாறுவதை கண்டு அதிர்ச்சியான டொவினோ தாமஸ், உடனே சுதாரித்து, தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தான் அவ்வாறு நடந்துகொண்டது வேண்டுமென்றே அல்ல என்றும், கூட்டத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் பின்னால் இருந்து ஒருவர் குத்தியதால் ஏற்பட்ட வலியின் காரணமாகவே தன்னையறியாமல் கத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளார் டொவினோ தாமஸ்.