ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் வயதான ஒரு பெண்மணி பேசும் வீடியோ ஒன்று வைரலாக உலா வந்தது.. அந்த வீடியோவில் பேசிய பெண்மணி, தனக்கு மோகன்லாலை மிகவும் பிடிக்கும் என்றும் அவரை நேரில் பார்க்க ஆவலாக இருப்பதாகவும், திருவனந்தபுரத்தில் இருக்கும் தன்னை நேரம் இருந்தால் மோகன்லால் வந்து சந்திப்பாரா என்றும் ஏக்கத்துடன் பேசியிருந்தார்.. யாரோ ஒரு இளைஞர்தான் இவரது ஏக்கத்தை வீடியோவாக மாற்றி சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளார்..
இந்த வீடியோ எப்படியோ மோகன்லாலின் கவனத்துக்கும் சரியான நபர்களால் கொண்டுபோகப்பட்டது. இதனை பார்த்து நெகிழ்ந்துபோனார் மோகன்லால்.. தற்போது பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் வில்லன் பட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தான் நடந்து வருகிறது. வீடியோவில் பேசிய பெண் அங்குள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் வசித்து வருகிறார். இன்று கலை நேராக அங்கே சென்ற மோகன்லால், அந்த வயதான பெண்மணியை நேரில் சந்தித்து சந்தோஷத்தில் அவரை திக்குமுக்காட வைத்துவிட்டார்.. சிறிது நேரம் அவருடன் பேசி செலவிட்டு, அதன்பின்னரே ஷூட்டிங்கிற்கு கிளம்பிச்சென்றார் மோகன்லால்.