சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இன்றைய தேதியில் தமிழ்சினிமா இயக்குனர்களின் மோஸ்ட் வான்டட் எழுத்தாளர்களில் முதல் சாய்ஸ் ஆக இருப்பவர் இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் தான்.. ஷங்கர், மணிரத்னம் உட்பட ஜாம்பவான்கள் எல்லாம் தங்களது படத்தின் கதை உருவாக்கத்தில், வசனத்தில் ஜெயமோகனின் பங்கு இருக்கவேண்டும் என்பதை அதிகம் விரும்புகின்றனர்.. தற்போது ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள '2.O' படத்திலும் ஜெயமோகனின் பங்கு கணிசமாக உள்ளது.. தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் ஜெயமோகனுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறார்கள் சில இயக்குனர்கள்..
அந்த வகையில் விருதுகள் பல பெற்ற 'ஒளிமுறி' படத்திற்கு கதை எழுதிய ஜெயமோகன், தொடர்ந்து 'காஞ்சி', ஒன் பை டூ' உட்பட சில படங்களில் கதை எழுதினார்.. தற்போது 'என்னு நிண்டே மொய்தீன்' வெற்றிக்கூட்டணியான ஆர்.எஸ்.விமல்-பிருத்விராஜ் இருவரும் மீண்டும் இணையும் வரலாற்றுப்படமான 'கர்ணன்' படத்தில் ஜெயமோகன் தனது பங்களிப்பை தந்து வருகிறார்.. இவையெல்லாவற்றையும் விட ஜெயமோகனுக்கு உள்ள இன்னொரு ஆசை என்னவென்றால், சி.வி.ராமன் பிள்ளை எழுதிய தர்மராஜா என்கிற நூலை அருமையான திரைக்கதையாக்கி வைத்திருக்கிறாராம்.. இந்த கதையில் மம்முட்டி நடிக்கவேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாம். மம்முட்டி ஒகே சொல்லிவிட்டால் இது திரைப்படமாவதற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறாராம் ஜெயமோகன்.