ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் 'YSR FILMS' பட நிறுவனத்தின் தயாரிப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் படம் 'கொலையுதிர்காலம்'. பில்லா-2 படத்தை இயக்கிய சக்ரி டோலேட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். கொலையுதிர்காலம் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் ஹிந்தியிலும் இப்படம் ரீ-மேக் ஆகிறது.
தமிழில் நயன்தாரா நடிக்கும் கேரக்டரில் ஹிந்தியில் தமன்னா நடிக்கிறார். தேவி படத்துக்கு பிறகு தமன்னாவுடன் நெருக்கமாக இருந்து வரும் பிரபுதேவா, கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தியி ரீமேக்கில் நடிக்கிறார். 'கொலையுதிர்காலம்' ரீமேக்கில் பிரபுதேவாவுக்கு நெகட்டிவ்வான கேரக்டராம். ஏறக்குறைய வில்லன் போன்ற வேடம் என்று கூறப்படுகிறது.
பிரபு தேவாவும், தமன்னாவும் மீண்டும் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடர்ந்து நடந்து வருகிறதாம். பிரபுதேவா நடிக்கும் இந்த கேரக்டரில் தமிழில் யார் நடிக்கிறார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர் படக்குழுவினர். அந்த வேடத்தில் பிரபுதேவாவை நடிக்க வைக்கவே இயக்குநரும், தயாரிப்பாளரும் விரும்புகின்றனர்.
இதற்கு நயன்தாரா பாதி மனதோடு சம்மதம் என்று சொன்னாலும் விக்னேஷ்சிவன் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, பிரபுதேவா வேண்டாம் வேறு நடிகரை போடுங்கள் என்று சொல்லிவிட்டாராம் நயன்தாரா. இந்த குழப்பத்தினால் கொலையுதிர்காலம் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அதுவரை ஹிந்தி வெர்ஷனில் கவனம் செலுத்தி வருகின்றனர்.