ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை அஞ்சலி எப்போது நடிகையாக அறிமுகமானாரோ அப்போதிலிருந்தே அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீப காலமாக அவருக்கும் நடிகர் ஜெய்க்கும் காதல் என தகவல்கள் வெளிவந்தன. 'மகளிர் மட்டும்' டீசர் வெளியான போது ஒரு வீட்டில் ஜெய்யும், அஞ்சலியும் தாங்கள் தோசை சுட்டதைப் பற்றி அன்பான காதல் வார்த்தைகளுடன் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்கள். சமீபத்தில் 'பலூன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த அன்று ஜெய்யும் “நானும் உன்னை மிகவும் மிஸ் செய்வேன் அஞ்சு” என்று செல்லமாக டிவீட்டியிருந்தார்.
அந்த டிவீட் டோலிவுட் வட்டாரங்களிலும் பற்றிக் கொண்டது.அஞ்சலி நடித்து விரைவில் வெளிவர உள்ள 'சித்ரங்கதா' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அப்போது பலரும் அஞ்சலியிடம், ஜெய்யுடனான காதல் பற்றி கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு, “நான் இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறேன். ஐந்தாறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் திருமணத்தைப் பற்றியெல்லாம் இப்போது யோசிக்கவே நேரமில்லை. என்னைப் பற்றி வரும் பல செய்திகள் ஆதாரமில்லாதவை,” என்று பதிலளித்திருக்கிறார்.
திரையுலகில் பல காதல் கதைகள் இப்படித்தான் சொல்லப்பட்டு வந்தன. ஆனால், அதன் பின் அவற்றில் பெரும்பாலான கதைகள் நிஜமாகவே முடிந்திருக்கின்றன. அஞ்சலி - ஜெய் காதலும் அந்த வரிசையில்தான் இருக்கும் என்று திரையுலகிலும் சொல்கிறார்கள்.