ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் பாரதிராஜா தற்போது ஓம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது லண்டனில் நடக்கும் கதை. 60 வயது முதியவருக்கும், இளம் பெண்ணுக்குமான அன்பு பரிமாற்ற கதை. இதன் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் நடந்துள்ளது. இது தவிர விஜய் யேசுதாஸ் நடிக்கும் படைவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அவரது ஆஸ்தான கதாசிரியரான ரத்னகுமார் எழுதியுள்ள கதையை படமாக இயக்கி வருகிறார். இது ஒரு குறுகியகால தயாரிப்பு. இதில் பாரதிராஜாவுடன், விதார்த் நடிக்கிறார். இந்தப் படம், கடந்த நவம்பர் மாதம் 8ந் தேதி பிரதமர் மோடி திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் என்று அறிவித்தன் பின்னணியில் உருவாகும் கதை.
திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து தன் மொத்த சேமிப்பையும் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருக்கும் ஒருவர் திடீர் அறிவிப்புக்கு பிறகு தன் மகள் திருமணத்தை நடத்த எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை காமெடியாகவும், சீரியசாகவும் சொல்கிற கதை என்கிறார்கள். படத்திற்கு அவரது பேவரைட் வாக்கியமான என் இனிய தமிழ் மக்களே என்பதை தலைப்பாக வைத்திருக்கிறார். இதன் பிடிப்புகள் புதுக்கோட்டை, காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.