ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தான் இன்றைக்கு பரபரப்பான செலிபிரிட்டி. அவரது டுவிட்டரில் நடிகர், நடிகைளின் அந்தரங்க படங்களை வெளியானதோடு, தனக்கு அவர்களால் பாலியல் தொந்தரவும் ஏற்பட்டது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை சுசித்ரா மறுத்துள்ளார், தன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவதாக கூறியுள்ளார். அதேசமயம், அவரது பெயரில் ஏராளமான டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு ஏராளமான நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுசித்ரா தீர்க்க முடியாத பிரச்சினை காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
நானும் எனது கணவர் கார்த்திக் குமாரும் கடந்த 10 வருடங்களாக குடும்ப வாழ்க்கை நடத்தினோம். ஆனால் இப்போது அந்த வாழ்க்கை நன்றாக இல்லை. எங்கள் குடும்ப வாழ்க்கை விவாகரத்தை நோக்கிச் செல்கிறது. எனது சொந்த வாழ்க்கையையும் இப்போது தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
எனக்கு எதிரிகள் இல்லை. நண்பர்கள் தான் அதிகம் உண்டு. டுவிட்டர் சர்ச்சையில் எனது கணவர் எனக்கு எதிராக செயல்படவில்லை. அவர் தங்கமான மனிதர். பூமியில் ராமரைப்போல் அவரை பார்க்கிறேன். ஆனாலும் நாங்கள் தீர்வுகாண முடியாத ஒரு பிரச்னை காரணமாக விவாகரத்து செய்யப்போகிறோம். இவ்வாறு சுசித்ரா கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுசித்ராவை மனநல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதையும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள சுசித்ரா, "என்னை ஏன் வலுக்கட்டாயமாக மருத்துவனைக்கு அழைத்துச் சென்றார்கள். எனக்கு என்ன பிரச்சினை என்று எதுவும் எனக்கு தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.