ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மம்முட்டி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறார்.. அதனால் தானோ என்னவோ அவருக்கும் தனது கல்லூரி காலம் ஞாபகம் வந்துவிட்டது போலும்.. இத்தனை வருடங்களில் தன்னுடன் கல்லூரியில் படித்த சில நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே தொடர்பிலிருந்த மம்முட்டி அவர்களின் வீட்டு நல்லது கெட்டதுகளிலும் தவறாமல் பங்கேற்று வந்தார்.. சமீபத்தில் மம்முட்டியின் கல்லூரி பேட்ஜ் மாணவர்கள் நாற்பது வருடம் கழித்து அனைவரும் ஒன்றாக சந்திக்கும் திட்டத்திற்கு ஏற்பட்டு செய்திருந்தனர்.
இதை மம்முட்டியின் நெருங்கிய நண்பர்கள் சிலர் மூலமாக அவரது கவனத்துக்கும் கொண்டுவந்தனர்.. மேலும் அந்த நிகழ்வில் மம்முட்டியும் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கையையும் வைத்தனர். மம்முட்டிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, சம்மதம் சொன்னதோடு அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.. குறிப்பாக அதில் பலரையும் அடையாளம் கண்டுபிடித்து சரியாக சொன்ன மம்முட்டி, ஒரு நண்பரின் பட்டப்பெயரையும் ஞாபகமாக வைத்து அவரை அழைக்க, சந்தோஷத்தின் உச்சிக்கே போய்விட்டாராம் அந்த நண்பர்.