ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரசியல் ஆசையில் அலைந்து திரிந்த பேய் நடன குரு நடிகருக்கு பித்து பிடிக்காத குறையாம்! அதாகப்பட்டது ., தன்லைப்புக்கு லைன் காட்டிய உச்ச நட்சத்திரம் பாணியில் ராகவேந்திராய நமக ., என கோயில் எல்லாம் கட்டிய ., அந்த நடன குரு நடிகருக்கு தமிழக "மல்லு கட்டு விவகாரத்திற்கு அப்புறம் மெல்ல, மெல்ல பொலிட்டிக்கல் ஆசை, புயலாகத் தோன்றியதாம். இதை, இலை மறைகாயாக "வருவேன், வருவேன்... என வராமல் போன குருநாதர் பாணியில், வர மாட்டேன், வர மாட்டேன்... ஒரு வேளை தேவைபட்டால்..." என பிரஸ் மீட்டெல்லாம் வைத்து, வந்துவிட துடித்த நடன குருவிற்கு, "ஆப்(பு)" பாக அமைந்திருக்கிறது, ஆளும், கழகம் இரண்டு, மூன்று துண்டாய், உடைந்தததும், செயல் தலைவரின் இன்றைய செயல்பாடுகளும், "மல்லு கட்டு" போராளிகள், எங்களுக்கும் எங்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும், அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை... என அறிக்கைவிட்ட அதிரடியும், நடிகர் நடன குருவை ரொம்பவே திக்கு முக்காடி போக விட்டிருக்கிறதாம்.
அதனால் தனது அரசியல் பிரவேசத்தை மீத்தேன், ஈத்தேன், கார்பன் திட்டங்களுக்கு எதிரான போரட்டங்களுக்குப் பின் காட்டிக் கொள்ளலாம் என பித்துப் பிடிக்காத குறையாக காத்திருக்கிறாராம் மனிதர் பாவம். "ஆமா, தவிர்க்க இயலாத சூழலால் தள்ளி தள்ளி போகும். உங்க "மொட்ட கெட்ட" வருமா ?வராதா...? அதை முதலில் சொல்லுங்கள் நடன குருவே.?!