ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை அமலாபாலை காதல் திருமணம் செய்து கொண்ட இயக்குனர் ஏ.எல்.விஜய், தேன்நிலவுக்காக 50 லட்சம் செலவு செய்தார். அந்தளவுக்கு அமலாபால் மீது காதலுடன் இருந்தார். யார் கண்பட்டதோ வெகு சீக்கிரமே இவர்களின் காதல் கசந்துபோய் இருவரும் சட்டபூர்வமாக பிரிந்தனர். இந்நிலையில், ஏ.எல்.விஜய் விரைவில் மறு திருமணம் செய்யவிருக்கிறார் என்றும், அவருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருகிறார்கள் என்பது போனற தகவல்கள் மீடியாக்களில் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இப்படி ஒரு தகவல் கடந்த வாரமே கசிய ஆரம்பித்தநிலையில் திடீரென விழித்துக் கொண்டு தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலம் மறுப்பு அறிக்கையை ஊடகங்களுக்க அனுப்பி வைத்திருக்கிறார் ஏ.எல்.விஜய். அவரைப் பற்றி எத்தனையோ கிசுகிசுக்கள் வெளியாகி இருக்கின்றன. அப்போதெல்லாம் அமைதியாக இருந்தவர் இப்போது இரண்டாவது திருமணம் குறித்த செய்திக்கு இப்படி பதறுவது ஏன்? இயக்குநர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்....
அமலாபாலை விவாகரத்து செய்த பிறகு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரியும் ஒரு பெண் மீது காதலுடன் இருக்கிறாராம் விஜய். இந்த விஷயம் சம்மந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு இன்னும் தெரியாதாம். அதனால் தான் மறுப்பு அறிக்கை விஜய் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் ஒரு காதல் கதையா?