ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. விளம்பர படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாக வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு மாடலாகி, அதன் பிறகு பானா காத்தாடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, மாஸ்கோவின் காவிரி மாதிரி மிகப்பெரிய தோல்வி படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தெலுங்கிற்கு துரத்தப்பட்டு, அதன் பிறகு அங்கு நம்பர் ஒன் இடத்தை பிடித்து, பின்னர் தமிழுக்கு வந்து இங்கும் வெற்றிக்கொடி பிடித்தார்.
சமந்தா சினிமாவுக்கு வந்து நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பது வருமாறு: 7 வருடங்கள் முடிந்து விட்டது, நான் சினிமாவுக்கு வந்து, குடிசையிலிருந்து கோபுரம் சென்றவர்களின் கதை போன்றது தான் என்னுடையதும். அதில் எனக்கான உழைப்பு, பாதுகாப்பின்மை, வெற்றி, தோல்வி, ஏமாற்றம், நிராகரிப்பு, வலி, சோகம், புகழ், செல்வம் ஆகிய எல்லாம் இருந்தது.
இவ்வளவு நாள் அனுபத்தில் நான் கற்றது என்னவென்றால் செல்வமும், வெற்றியும் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைத்து விடாது என்பதுதான். இந்த 7 வருடங்களில் நான் படப்பிடிப்பில் இல்லாத நாட்களே கிடையாது. என்னை குறித்து வந்த விமர்சனங்கள், வதந்திகள் எதுவும் என்னை பாதிக்கவில்லை. இதற்கு காரணம் என் சினிமாவும், என்னை நேசிக்கிற மக்களும் தான். இதை நான் பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன். வாழ்நாள் முழுவதும் நானும் அந்த மக்களுக்கு என் நன்றியை திருப்பி கொடுத்துக் கொண்டிருப்பேன். என்று பதிவிட்டுள்ளார்.