ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமைக்கு பிறகு அவருக்கு பக்கபலமா இருந்து செயல்பட்டவர் பிருத்விராஜ். இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்த பாவனாவை சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க அழைத்து வந்திருப்பது பிருத்விராஜ்தான். இந்த நிலையில் இனி பெண்களை இழிவுபடுத்தும் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
பாவனாவிடமிருந்த மனோதிடமே அவரை இந்த இக்கட்டிலிருந்து விடுவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது. இனி நான் பெண்களை வக்கிரமாக சித்தரிக்கும் கேரக்டர்களிலோ, படங்களிலோ நடிக்க மாட்டேன். இதற்கு முன்பு அப்படி நடித்தற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார். பிருத்விராஜின் இந்த அறிவிப்பு மலையாள நடிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இனி அவர்களும் அடுத்தடுத்து இதுபோன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.