ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் சாய் சக்தி. சென்னை மெரினாவில் நடந்த இளைஞர் போராட்டதில் கலந்து கொண்ட அவர், இளைஞர்கள் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்கிறார்.
அதுபற்றி சாய் சக்தி கூறுகையில், தற்போது நான் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. பிரியமானவள் சீரியலில் நடிக்க அழைத்தனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். காரணம், தற்போது துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மாடலிங், ராம்போக் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அதுதவிர காஸ்டி யூம், மேக்கப் கோர்ட்ஸ் எடுத்து படித்து வருகிறேன். அடுத்தபடியாக சீரியல்களில் மீண்டும் நடிப்பேன். ஆனால் எனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு இதுவரை நடிக்காத மாறுபட்ட கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிப்பேன்.
மேலும், சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எனக்கு இப்போது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. காரணம், தமிழ்நாட்டு மக்களெல்லாம் இனிமேல் அரசியல்வாதிகள் இல்லாமல் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவர்கள் எம்எல்ஏவாகி அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதனால் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து மக்களுக்காக உழைக்கப்போகிறேன். இளைஞர்கள் நினைத்தால் இந்த நாட்டில் பெரிய மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டம் நிரூபித்துவிட்டது. அதனால் இளைஞர்களின் அடுத்த போராட்டம் அரசியல் களத்தில் இறங்கி புரட்சியை ஏற்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் சாய்சக்தி.