ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல ஹிட்டான பாடல்களைப் பாடிய பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவிட்ட சில விஷயங்கள் திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு 20ம் தேதி சுசித்ரா “தனுஷ், என்னை விட்டு விலகியிருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். அதன் பின் “தனுஷ் ஒரு கடவுள்” என்றும் பதிவிட்டுள்ளார்.
நேற்று “கமல்ஹாசன், அரவிந்த்சாமி ஆகியோரின் மிகப் பெரிய ரசிகை நான். அவர்களின் டிவீட்டுகள் முழுவதுமாக பணம் கொடுத்து போடப்படாதவை” என்று சொல்லியிருக்கிறார். தொடர்ந்து சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றி, பாவனா விவகாரம் ஆகியவற்றைப் பற்றி சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
“சிம்பு தான் வெற்றியாளர்”, “நான் பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் விளையாடிய ஒரு அசிங்கமான விளையாட்டைப் பற்றி நான் அனைவருக்கும் சொல்லத் தயாராக இருக்கிறேன். சிம்பு நீங்கள் சொன்னது சரிதான்,”, என்றும் தொடர்ந்து சில பதிவுகளைப் போட்டுள்ளார்.
சுசித்ராவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதென்றும் அதை யாரோ தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் நேற்று கருத்து பரவியது. ஆனால், அதன் பின் கையில் காயங்களுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார் சுசித்ரா. “தனுஷ் குழுவினரால் கடினமாகக் கையாளப்பட்ட என்னுடைய கை இது. மன்னிக்கவும் நண்பா, தகுதியற்றவர்” என்று கடுமையான பதிவையும் பதிவிட்டுள்ளார்.
“நான் இந்தப் புகைப்படத்தை போட விரும்பவில்லை. நியாயமாக நடந்து கொள்ளவே விரும்புகிறேன். குளறுபடி செய்வதை சத்குரு நிறுத்த மாட்டார். ஆக, இது ஒரு போராட்டம்” என்றும் கூறியிருக்கிறார்.
“இதெல்லாம் நிதர்சனமான உண்மை. நான் தாக்கப்பட்டேன், மற்றவர்கள் எனக்கு உதவக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்கள். நன்றி சகோதரா,” என்றும் வெளிப்படையான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுள்ளார்.
சுசித்ராவின் இந்த டிவீட்டுகளுக்கு ஆதரவாக பலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், இது பற்றி திரையுலகத்தில் உள்ள எவருமே தங்களது கருத்துக்களை இதுவரை பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுசித்ரா - தனுஷ் இடையே என்ன பிரச்சனை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாக அறிவிக்காத வரை அது பற்றிய விவரங்கள் வெளியில் தெரிய வாய்ப்பில்லை.