ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினிகாந்தைப் போன்று ராகவேந்திரா சாமிகள் மீது பற்று கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதனால் சென்னை ஆவடியில் ஒரு ராகவேந்திரா கோயில் கட்டி அதை நிர்வகித்து வருகிறார். அதேபோல் தனது அம்மா கண்மணி மீதும் அதிக பாசம் கொண்டவரான லாரன்ஸ், அம்மாவுக்காக ஒரு கோயில் கட்டியிருக்கிறார். அதில் வைக்கப்பட்டுள்ள தனது அம்மாவின் சிலையை ராஜஸ்தானில் வடிக்கப்பட்டு கொண்டு வந்தார்.
மேலும், சென்னை பூந்தமல்லியில் கட்டப்பட்டு வந்த அந்த அம்மா கோயில் கட்டும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டது. அதனால் விரைவில் கோயிலை திறக்கப்போகிறாராம் லாரன்ஸ். அந்த அம்மா கோயிலை தனது ஆன்மீக குருவான நடிகர் ரஜினியை வைத்து திறக்க அவர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.