ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய தலைமுறை ரசிகர்களை பொறுத்தவரை நடிகை சாரதா என்பவரை ஒரு குணச்சித்திர நடிகையாக மட்டும் தான் தெரிந்திருக்கும். ஆனால் அறுபது எழுபதுகளில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் தான் சாரதா. ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய ஒரே நடிகை சாரதா. அந்த ஊர்வசி விருது இப்பொழுது சிறந்த நடிகைக்கான தேசிய விருது என்றழைக்கப்படுகிறது. அதனாலேயே இவரை 'ஊர்வசி' சாரதா என்றே அனைவரும் அழைப்பது வழக்கம். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது பூர்விகம் தெலுங்கு என்றாலும் மலையாளத்தில் இவர் கதாநாயகியாக நடித்த படங்கள் இவரை புகழ் வெளிச்சத்தில் உயர்த்தி பிடித்தன.
நாளடைவில் குணச்சித்திர நடிகையாக மாறிய சாரதா தமிழ், தெலுங்கு என தனது வட்டத்தை சுருக்கிக்கொண்டார். மலையாள சினிமாவை பொறுத்தவரை சீனியர்களான பிரேம் நசீர், மது, சத்யன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ள சாரதாவிற்கு இன்னும் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காதது ஒரு மனக்குறையாகவே இருந்து வருகிறதாம். சமீபத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் ஆசையை தனது பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் சாரதா.. இதற்கு முன் 2015ல் 'அம்மக்கொரு தாராட்டு' என்கிற மலையாள படத்தில் சராதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.