ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்க தமிழில் காற்று வெளியிடை என்ற பெயரிலும் தெலுங்கில் செலியா என்ற பெயரிலும் திரைக்கு தயாராகி வரும் படத்தில் முதலில் நாயகனாக நடிக்க பேசப்பட்டவர் நானி. மணிரத்னம் கூறிய காற்று வெளியிடை படத்தின் கதை பிடிக்காததால் நானி அப்படத்தில் கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. தெலுங்கு திரை உலகின் முன்னணி நயகனான நானி தமிழில் வெப்பம், நான் ஈ, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அதிலும் நானி சமந்தா ஜோடி சேர இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான நான் ஈ திரைப்படம் தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு பின்னர் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்திய நானி அங்கு தொடர் வெற்றிகளுடன் முன்னணி நடிகராகிவிட்டார். அண்மையில் நேனு லோக்கல் படத்தில் நடித்த நானி அப்படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குனர் சிவா நிர்வானந்த் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.