ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக எந்த ஒரு பிரபல ஹீரோ என்றாலும் படப்பிடிப்பின் பொது தங்களது ஷாட் முடிந்ததும் அருகில் உள்ள கேரவனுக்குள் புகுந்து விடுவார்கள். இன்னும் சிலர் ஸ்பாட்டிலேயே ஏதாவது ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் 'புலி முருகன்' பட ஷூட்டிங்ஸ்பாட்டில் செய்த காரியம் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை ஷாக் அடிக்க செய்திருக்கிறது.
விஷயம் இதுதான், 'புலி முருகன்' படத்தின் தொண்ணூறு சதவீத காட்சிகள் மலை சார்ந்த காட்டுக்குள்ளே தான் படமாக்கப்பட்டன. இதனால் புரொடக்சன் ஆட்கள் படப்பிடிப்பிற்கு தேவையான சாதனங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி வைக்கும் வேலைகள் எல்லாம் சாதாரண இடங்களை விட, இங்கே சிரமமாக இருக்கும். அந்த சமயத்தில் ஒரு ஷாட் முடிந்ததும் ஓய்வெடுக்க போகாத மோகன்லால் என்ன செய்தார் தெரியுமா..?
தான் நடித்து வந்த காட்சிக்கான உடையிலேயே (டவுசர்-பனியன்) பள்ளத்தில் இருந்த நபர்களிடம் சாதனங்களை வாங்கி மேலே இருப்பவர்களிடம் சாதாரண வேலையாட்கள் பேசுவதுபோல ஜாலியாக உரையாடிக்கொண்டே கைமாற்றி விட ஆரம்பித்தார். இந்த காட்சியை அந்த சமயத்தில் வீடியோவாக எடுத்த யாரோ இப்போது அதை சோஷியல் மீடியாவில் பதிவேற்றிவிட செம வைரல் ஆகியிருக்கிறது அந்த வீடியோ. ஒரு சாதாரண தொழிலாளியைப்போல மோகன்லால் இறங்கி வேலை செய்யும் அந்த காட்சியை பார்த்து சந்தோஷத்தில் ஷாக்காகி போயிருக்கிறார்கள் மோகன்லால் ரசிகர்கள்.