ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் பாபுராஜ். இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர். இவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று இடுக்கி பகுதியில் உள்ளது. அங்கே அவ்வப்போது பாபுராஜும் அவரது நண்பர்களும் வந்து தங்குவது வழக்கம். அப்படித்தான் சமீபத்தில் ரிசார்ட்டில் வந்து தங்கிய பாபுராஜை அந்த பகுதியை சேர்ந்த சன்னி என்கிற நபர் கத்தியால் குத்தினார் என சொல்லப்படுகிறது..
இதுபற்றி விசாரித்ததில் பாபுராஜின் ரிசார்ட்டின் ஒரு பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனை காலி செய்யும்படி தனது ரிசார்ட்டில் வேலை பார்க்கும் வேலையாட்களிடம் கூறியதாவும் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், அந்த குளத்தில் இருந்து தான் தங்களது தண்ணீர் தேவை நிறைவேறுகிறது எனவும் அது தீரும் வரை அதை ஒன்றும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்களாம்.
இந்தநிலையில் கோபமான சன்னி என்கிற இளைஞன் பாபுராஜை கத்தியால் குத்தியதாகவும் இதனால் காயம் அடைந்த பாபுராஜ் அருகில் இருந்த அடிமாலி நகரத்தின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஆனால் அவருக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்றுமில்லை என்றும் தெரியவந்துள்ளது.