ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இரண்டு தினங்களுக்கு முன் மோகன்லால் பட தயாரிப்பாளரான சோபியா பால் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தின் தயாரிப்பாளரான இவர் தன்னை பற்றியும் தனது மகன் கெவின் பால் பற்றியும் பேஸ்புக்கில் மோகன்லாலின் ரசிகர்கள் மிகவும் மோசமாக கமென்ட் அடித்தார்கள் என கூறி போலீஸில் புகார் கொடுக்கும் முடிவில் இருந்தாராம். படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றாலும் படத்திற்கு மேலும் மேலும் பப்ளிசிட்டி செய்யவில்லை என்றும் அடுத்தடுத்த புதிய போஸ்டர்களை வெளியிடவில்லை என்றும் கூறித்தான் இரண்டு ரசிகர்கள் இப்படி மோசமாக திட்டினார்களாம்.
இதுகுறித்த தகவல் கேரள மோகன்லால் ரசிகர் மன்ற தலைவரின் கவனத்திற்கு சென்றதாம். உடனே சோபியா பாலிடம் மிகவும் தன்மையாக பேசிய ரசிகர் மன்ற தலைவர், இதுபற்றி இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்துள்ளவர்கள் நிச்சயமாக மோகன்லால் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் மோகன்லாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக யாரேனும் சிலர் இப்படி செய்திருக்கலாம் என்று கூறினார்.
அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்ட அந்த இரண்டு நபர்களையும் கண்டுபிடித்தும் விட்டார். அவர்கள் மோகன்லாலின் ரசிகர்கள் அல்ல என்கிற உண்மையும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த இரண்டு நபர்களும் தயாரிப்பாளர் சோபியா பாலிடம் தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டுள்ளனராம். இதனால் அவர்கள் மீது புகார் கொடுக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டாராம் சோபியா பால்.