ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வம்சி அண்மையில் தமிழ் தெலுங்கில் இயக்கிய தோழா திரைப்படம் இரு மொழிகளிலும் வெற்றி பெற்றது. நாகார்ஜூனா கார்த்தி நடித்த தோழா படத்திற்கு பின்னர் வம்சி இயக்கவிருக்கும் படத்தில் டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வம்சி கூறிய கதை அல்லு அர்ஜூனுக்கு பிடித்துவிட்டதாகவும், இப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் வம்சி “நா பேரு சூர்யா மான ஊரு இந்தியா” எனும் தலைப்பையும் பதிவு செய்துள்ளார். இத்தலைப்பு அல்லு அர்ஜூனின் அடுத்த படமாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும் இயக்குனர் லிங்குசாமி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் புதிய படத்திலும் அல்லு அர்ஜூன் ஒப்பந்தமாகியுள்ளார். இவ்விரு படங்களில் எது முதலில் துவங்கப்படும் எனும் தகவல் இல்லை. தில் ராஜூ தயாரிப்பில் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கிவரும் டீஜே படத்தில் அல்லு அர்ஜூன் தற்போது நடித்து வருகின்றார்.