ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரகாஷ்ராஜுக்கும் ஜெயராமுக்குமான நட்பு ஆரம்பித்து 'பரமசிவன்' படத்தில் நடித்தபோதுதான்.. அதன்பின் தமிழில் 'சரோஜா' என்கிற படத்தில் இணைந்து நடித்தார்கள்.. இப்போது எட்டு வருடங்கள் கழித்து மலையாளத்தில் 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெயராமுக்கு சமீபத்தில் வெளியான 'ஆடுபுலியாட்டம்' என்கிற 100 நாள் வெற்றிப்படத்தை கொடுத்து, சரிந்துகிடந்த அவரது மார்க்கெட்டை உயர்த்தி பிடித்த கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.
அடுத்ததாக பிரகாஷ்ராஜ் தனது கனவுப்படத்தை இயக்கும் ஆரம்பகட்ட வேலைகளில் இருக்கிறார்.. பல வருடங்களாக தனது மனதில் உருப்போட்டு வந்த கதைக்கு உருவம் கொடுக்கும் முயற்சியில் இருந்த பிரகாஷ்ராஜ், இசை சம்பந்தமான அந்த கதையை 'அச்சாயன்ஸ்' ஷூட்டிங்ஸ்பாட்டில் ஜெயராமுடன் பகிர்ந்துகொண்டாராம்.. அப்போதுதான் ஜெயராம் கேரளாவின் பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் வாசிப்பதில் வித்தகர் என்பது பிரகாஷ்ராஜுக்கு தெரியவந்ததாம். அதனால் தான் இருமொழிகளில் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கு ஜெயராம் தான் பொருத்தமானவர் என அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம் பிரகாஷ்ராஜ். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக இது தயாராக இருக்கிறதாம்.