ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி இரண்டாம் பாகத்தை முடித்துக் கொடுத்து விட்டு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என செய்திகள் வட்டமடிக்கும் நேரத்தில் அவர் சிரஞ்சீவியின் 151வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலுக்கு சென்றதால் 9 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இப்போது அரசியலை கைவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். அவரது 150 படமான கைதி நம்பர் 150 மாபெரும் வெற்றி பெற்று 100 கோடி கிளப்பில் சேர்ந்திருக்கிறது. இந்த வெற்றியை அனுபவித்து வரும் சிரஞ்சீவி தனது 151வது படத்திற்கும் தயாராகிவிட்டார். சூப்பரான ஒரு கதை தயார் செய்யுமாறு தெலுங்கு இயக்குனர் சூரியிடம் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தையும் அவரது மகன் ராம்சரண் தான் தயாரிக்க இருக்கிறார்.
இதில் சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். கைதி நம்பர் 150 படத்தில் அனுஷ்கா தான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது அவர் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகுதான் நயன்தாரா பேசப்பட்டு கடைசியாக காஜல் அகர்வால் நடித்தார். அதனால் 151வது படத்தில் அனுஷ்கா தான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிரஞ்சீவி.