ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரை உலகில் பிரபல குணசித்திர நடிகரான ஜெகபதி பாபு தற்போது தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வில்லன் நடிகராக பிசியாகியுள்ளார். பொங்கலுக்கு வெளிவந்த, விஜய்யின் பைரவா படத்தில் வில்லனாக நடித்த ஜெகபதி பாபு அடுத்ததாக தெலுங்கில் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் சமந்தா ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஜெகபதி பாபு ஒப்பந்தமாகியுள்ளாராம். இயக்குனர் சுகுமார் இயக்கிய நானாகு பிரேமதோ எனும் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் வில்லனாக நடித்த ஜெகபதி பாபு மீண்டும் சுகுமாருடன் இணைந்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண் கேட்கும் திறனில் குறைபாடு உடையவராக நடிக்கின்றாராம். மைதிரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவு ரத்னவேலு. பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என தெரிகிறது.