ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தியேட்டர்களில் படம் துவங்குவதற்கு முன் கட்டாயம் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து தியேட்டர்களிலும் அது அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தும் விட்டது. ஆனால் தேசியகீதம் ஒலிக்கும்போது சிலர் அதை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்கிறார்கள் என்கிற சர்ச்சையும் எழுந்துள்ளது. குறிப்பாக கேரளாவில் உள்ள சில தியேட்டர்களில் அவ்வப்போது இந்த பிரச்சனை எழுவதாக தகவல் வந்துள்ளது.
நேற்று முன்தினம் கோழிக்கோடு நகரத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் தேசிய கீதம் ஒலித்தபோது ஒரு பெண்மணி தனது இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார்.. காரணம் அவர் மடியில் அவரது கைக்குழந்தை படுத்து உறங்கிக்கொண்டு இருந்ததால் அவரால் எழ முடியவில்லை.. ஆனால் படம் பார்க்க வந்த ஒரு சில நபர்கள், அவர் தேசிய கீதத்தை அவமரியாதை செய்வதாக நினைத்துக்கொண்டு, அந்தப்பெண்ணிடமும் அவரது குடும்பத்தாரிடமும் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டனர்..
ஒருவாறாக அப்போதைக்கு அடங்கிய பிரச்சனை படம் முடிந்து அந்தக்குடும்பத்தினர் தியேட்டரை விட்டு வெளியேறும்போது மீண்டும் ஆரம்பித்தது.. தற்போது அந்தக்குடும்பத்தின் மீது தாக்குதல் கொடுக்கவே தயாராகிவிட்டனர் அந்த பிரச்சனைவாதிகள்.. ஆனால் இந்தமுறை அருகில் இருந்த பொதுமக்கள் கலகம் செய்த நபர்களை இழுத்து தர்ம அடி கொடுக்க ஆரம்பித்தனாராம். பின்னர் போலீஸ் வந்து விசாரித்ததில் ஒரு அமைப்பை சேர்ந்த சிலர்தான் இந்த மாதிரி நடந்துகொண்டார்கள் என தெரியவந்துள்ளது.